திமுக கூட்டணி எம்.பி.,யை வெறுப்பேற்றி செல்லூர் ராஜு அடாவடி..!
இது தெரியாமல் அந்தக் கட்டடத்தைத் தனக்கு ஒதுக்கித் தரும்படி மாநகராட்சி ஆணையர் விசாகனை அணுகியிருக்கிறார் வெங்கடேசன்.
கடந்தமுறை மதுரை எம்பி-யாக இருந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணன், தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டடம் ஒன்றைப் புதுப்பித்து எம்.பி அலுவலமாகப் பயன்படுத்தி வந்தார். ஆனால், இப்போதுள்ள கம்யூனிஸ்ட் எம்.பி.,யான சு.வெங்கடேசனுக்கு அந்தக் கட்டடத்தைக் கொடுக்கக் கூடாது என்பது மதுரை அதிமுக அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோரின் ரகசிய உத்தரவாம்.
இது தெரியாமல் அந்தக் கட்டடத்தைத் தனக்கு ஒதுக்கித் தரும்படி மாநகராட்சி ஆணையர் விசாகனை அணுகியிருக்கிறார் வெங்கடேசன். அதிர்ந்துகூட பேசத் தெரியாத விசாகன், உள்விவகாரங்களைச் சொல்லாமல் அந்தக் கட்டடம் உள்ள இடத்தில் வணிக வளாகம் அமையவிருக்கும் விஷயத்தைச் சொல்லி சமாளித்திருக்கிறார். இதைக்கேட்டு கடுப்பான காம்ரேட், ஆணையரை கொஞ்சம் ஓவர் டோஸ் கொடுத்து எச்சரித்துச் சென்றாராம்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் விசாகன். மாநகராட்சியின் மற்ற அதிகாரிகளோ, “எம்பி-க்கு அலுவலக கட்டிடம் தேவை என்றால் அதை ஆட்சியரிடம்தானே கேட்க வேண்டும். அதை விடுத்து, மாகராட்சி ஆணையரோடு மல்லுக்கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று ஆதங்கப்படுகிறார்கள்.