திமுக கூட்டணியில் இருந்தும் சிங்கிள் டீக்கு வழியில்லையே… மருகும் திருமா- வைகோ கட்சி தொண்டர்கள்..!

 

திமுக கூட்டணியில் இருந்தும் சிங்கிள் டீக்கு வழியில்லையே… மருகும் திருமா- வைகோ கட்சி தொண்டர்கள்..!

திருமாவளவனுக்கு பிரசாரம் செய்ய, பல ஊர்களில் இருந்தும் வரும் விசிக கட்சி தொண்டர்கள், சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு, திருமா தரப்பில் ‘சிங்கிள் டீ’ கூட வாங்கி தருவதில்லையாம்.

திமுக, கூட்டணியில் அங்கம் வகிக்கும், மதிமுக மூன்று தொகுதிகளை கேட்டு போராடி கடைசியில் ஈரோடு தொகுதியை மற்றும் கைப்பற்றியது. கூடவே ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றனர். 

தொகுதி பங்கீட்டில்தான் திமுக கிள்ளிக் கொடுத்தது என நினைத்தால், தேர்தல் பிரசாரத்திலும் மதிமுகவை திமுக கண்டுகொள்வதே இல்லை எனப் புலம்பல்கள் தமிழகம் முழுவதும் கேட்கிறது.

vaiko

சமீபத்தில், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மதிமுக பகுதி செயலர் செல்வபாண்டியனை, பிரசார வாகனத்தில் ஏற்றிக் கொள்ளாமல் கிளம்பி விட்டனர். 

tamil

இதனால் நொந்துபோன செல்வபாண்டியன், மற்றொரு நிர்வாகியின் இரு சக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டே அன்றைய பிரசாரம் முடியும் வரை பிரச்சார வாகனத்தின் பின்னாடி பயணித்து இருக்கிறார்.

இங்காவது நிலைமை இப்படி என்றால், விசிக தொண்டர்களின் நிலைமை இன்னும் மோசம். திமுக, கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வேட்பாளர்களும், தங்களது பிரசாரத்துக்கு வரும் கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் காலை முதல் பிரசாரம் முடியும் வரை சாப்பாடு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து வருகின்றனர். 

csddsv

ஆனால், திருமாவளவனுக்கு பிரசாரம் செய்ய, பல ஊர்களில் இருந்தும் வரும் விசிக கட்சி தொண்டர்கள், சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு, திருமா தரப்பில் ‘சிங்கிள் டீ’ கூட வாங்கி தருவதில்லையாம். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களை கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள் விசிக தொண்டர்கள்.

இதையும் வாசிங்க

’சின்னம்மா செத்துட்டாங்க’…மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்…