திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது! – கமலுக்கு செக் வைத்த சஞ்சய் தத்

 

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது! – கமலுக்கு செக் வைத்த சஞ்சய் தத்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைய விரும்பினால் வரவேற்கத் தயார் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைய விரும்பினால் வரவேற்கத் தயார் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்துவரும் கட்சி, திமுக. அவ்வப்போது கூட்டணிக்குள் சில புகைச்சல்கள் எழுந்தாலும், இன்று வரை அவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

இது இப்படி இருக்க, சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அளித்திருந்த பேட்டியில், ‘காங்கிரஸ் – திமுக கூட்டணி உடையும் என்றும், அதன்பின் காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும்’ என்றும் பேசியிருந்தார்.

sanjay dutt

இந்த விவகாரம் திமுக, காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத், “மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் கமல் இணைய விரும்பினால் வரவேற்போம். அதுகுறித்து, திமுகவுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்” என தெரிவித்துள்ளார்.