தினமும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ’10 வயது சிறுமியை நாசம் செய்த 60 வயது முதியவர்’ : தெருவில் அடித்து ஓடவிட்ட பொதுமக்கள்!

 

தினமும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ’10 வயது சிறுமியை நாசம் செய்த 60 வயது முதியவர்’ : தெருவில் அடித்து ஓடவிட்ட பொதுமக்கள்!

இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சுந்தரம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட விஷயம் தெரியவந்துள்ளது. 

மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்குத் தாய் தந்தை இல்லை. இதனால் அந்த சிறுமி தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த 60 வயதான சுந்தரம் என்ற முதியவர் சிறுமிக்கு அடிக்கடி தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

TTN

இதையடுத்து சிறுமியை அவரது தாத்தா அரசு விடுதியில் சேர்க்க அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.அப்போது தான் சிறுமி பலமுறை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சுந்தரம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட விஷயம் தெரியவந்துள்ளது. 

TTN

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியைக்கள் முதியவர் சுந்தரத்தைத் தெருவில் ஓட ஓட விரட்டி அடித்தனர். பின்பு சுந்தரம் அங்குள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.