திடீரென பற்றிய தீ.. 11 கல்லூரி பேருந்துகள் எரிந்து நாசம் !

 

திடீரென பற்றிய தீ.. 11 கல்லூரி பேருந்துகள் எரிந்து நாசம் !

வேங்கட மங்கலம் பகுதியில் உள்ள பழுது பார்க்கும் இடத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் விடப் பட்டிருந்தன.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கட மங்கலம் பகுதியில் உள்ள பழுது பார்க்கும் இடத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் விடப் பட்டிருந்தன. இன்று வழக்கம் போல ஊழியர்கள் பேருந்தைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென 4 பேருந்துகளில் ஒரே நேரத்தில் தீ பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென அங்கிருந்த மற்ற பேருந்துகளுக்கும் பரவியுள்ளது.

ttn

பின்னர் அங்கே சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாகனங்களின் அருகே இருந்த ஊழியர்களையும் தீக்காயம் ஏற்படாமல் வீரர்கள் மீட்டனர். இந்த விபத்தில் மொத்தமாக 11 பேருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதில் எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இப்போது வரை ஏன் தீப்பற்றியது, எப்படித் தீப்பற்றியது போன்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், திடீரென தீப்பற்றியதால் யாரெனும் தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.