திங்கள் முதல் வெள்ளி வரை வேலை பார்த்தால் போதும்….. மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…..

 

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை பார்த்தால் போதும்….. மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…..

மகாராஷ்டிராவில் மாநில அரசு ஊழியர்களின், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கோரிக்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 29ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அனைத்து மாநில அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க வேண்டும் என அம்மாநில அரசு பணியாளர்கள் சங்கம் நீண்ட காலம் கோரிக்கை விடுத்து வந்தது. இதனை முதல்வர் உத்தவ் தாக்கரே பரிசீலனை செய்தவதாக உறுதி அளித்து இருந்தார்.

உத்தவ் தாக்கரே

இந்நிலையில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி என்ற மாநில பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டும் அம்மாநில அரசு பணியாளர்கள் வேலை பார்த்தால் போதும். அதேசமயம் அவர்களது தினசரி பணி நேரம் 45 நிமிடங்கள்  நீடிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா அரசு பணியாளர்கள்

காலை 9.45 மணிக்கு பணியை தொடங்கும் அம்மாநில அரசு பணியாளர்கள் மாலை 6.15 வரை வேலை பார்க்க வேண்டும். தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பணியாளர்கள் காலை 9.45 மணிக்கு பணியை தொடங்கி மாலை 5.30 மணிக்கு நிறைவு செய்கின்றனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.