தாய்ப்பால் கொடுக்க முடியாததால் இந்திய விமானப்படை வீரர் மனைவி தற்கொலை!

 

தாய்ப்பால் கொடுக்க முடியாததால் இந்திய விமானப்படை வீரர் மனைவி தற்கொலை!

குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையில் விமானப்படை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி: குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையில் விமானப்படை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடியை சேர்ந்த கோவிந்தராஜபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபக் யாதவ். இவர் ஆவடியில் உள்ள இந்திய விமான படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் நிலையில் இந்த தம்பதிக்கு   5 மாத பெண்  குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஆர்த்திக்கு தைராய்டு பிரச்சனை இருந்துள்ளது. இதனால் குழந்தைக்குச் சரிவர தாய்ப்பால் கொடுக்க முடியாமல் ஆர்த்தி மனவேதனையில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி வீட்டின் மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார். ஆர்த்தியின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்த தம்பதிக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகின்றது.