தாயின் கண்முன்னே பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை: அதிர வைக்கும் காரணம்!

 

தாயின் கண்முன்னே பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை: அதிர வைக்கும் காரணம்!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் என்னும் மாவட்டத்திலுள்ள புச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்.

சிக்கமகளூர்: ஜோதிடர் அறிவுரையால் பிறந்து ஒரு மாதமே  ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் என்னும் மாவட்டத்திலுள்ள புச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி சுசித்ரா. இவர் கர்ப்பம் தரித்த நிலையில் இவருக்கு ஆண்  குழந்தை பிறந்தால் வாழ்க்கை  சிறப்பாக அமையும் என்று ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை கொண்ட மஞ்சுநாத் குழந்தை பிறக்கும் நாளுக்காகக் காத்திருந்துள்ளார். 

baby

இதையடுத்து கடந்த மாதம் சுசித்ராவுக்கு  பெண் குழந்தை பிறந்தது. இதனால் கவலையடைந்த கணவர் மஞ்சுநாத் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து மனைவி கேட்டபோது, பெண் குழந்தையால் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படவுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்   பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொல்ல மஞ்சு முடிவு செய்த மஞ்சுநாத் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதை அவர் மனைவி பார்த்து கூச்சலிட மஞ்சு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

arrest

இதுகுறித்து அப்பகுதியிலிருந்த காவல்நிலையத்தில் மஞ்சுநாத்தின்  குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான மஞ்சுநாத்தை  கைது செய்தனர்.