‘தள்ளாத வயதிலும் பிரிக்க முடியாத பாசம்’ : எம்ஜிஆர் போட்டோவை பார்த்து கதறும் மூதாட்டி!

 

‘தள்ளாத வயதிலும் பிரிக்க முடியாத பாசம்’ : எம்ஜிஆர் போட்டோவை பார்த்து கதறும் மூதாட்டி!

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ள ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் என்று சொல்லலாம்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி வருகின்றனர். சினிமா முதல் அரசியல் வரை இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ள ஒரு தலைவர் என்றால் அது எம்ஜிஆர் என்று சொல்லலாம். அதிமுக என்ற கட்சிக்கு ஆணிவேராக இருந்து மறைந்தவர். 

ttn

எம்ஜிஆர் இறந்து ஆண்டுகள் பல கடந்தாலும் எதற்காக அதிமுக ஓட்டு போடுகிறீர்கள் என்று கேட்டால், எம்ஜிஆருக்காக என்று சொல்ல கூடிய அவரது விசுவாசிகள், ரசிகர்கள் எல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் திரைப்படங்களில் சொன்ன கருத்துக்கள், பேசிய வசனங்கள் எல்லாம் இன்றுவரை எம்ஜிஆரை அவர்களுடன் நிரந்தரமாகப்  பிணைத்திருக்கச் செய்கிறது. 

ttn

அந்த வகையில் மூதாட்டி ஒருவர் தனது தள்ளாத வயதிலும் எம்ஜிஆரின் போட்டோவை வைத்து மாலை  அணிவித்து கையைவிரித்து அழும் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த இந்த ஒரு புகைப்படம் போதும்.