‘தளபதி – தல’ என பதிவிட்டு அஜித் ரசிகர்களிடம் சிக்கிய மதுமிதா
மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.
கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாகப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. இருப்பினும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.
இந்நிலையில் மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித் விஜய் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தளபதி, தல ரெண்டு பேருமே எனக்கு அன்பானவர்கள். ரொம்ப ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க… அதனால தல தளபதி தம்பிகள் தங்கைகள் -அண்ணன் அக்காக்கள் அனைவருக்கும் ஒரு அட்டென்ட்டென்ஸ்… வணக்கம். மகிழ்ச்சியான நாளாக அமையட்டும் இந்நாள்! அனைவருக்கும் நன்றி!!’ என்று பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட அஜித் ரசிகர்கள் எப்பவுமே தல தான் முதல்ல. அவருக்கு அப்புறம் தான் யாரா இருந்தாலும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
First thala nu sollugankka…Thalaiku apram dhan yaara irundhalum
— syedibrahim (@ramzan22222) December 20, 2019
இதில் ரசிகர் ஒருவர், போட்டா- வுல “தல” யையும் 1-St ம்ம்.. எழுத்துல “தளபதி”யை 1-St ம்ம்…வச்சு நீங்க ஒரு “இராஜதந்திரி” என்று நீருபிக்கிறீர்ர்..என்று கமெண்ட் செய்ய அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, அதைக் கண்டுபிடிச்சு புத்திசாலி என நிரூபிக்கிறீர் அமைச்சரே…என்று பதிலளித்துள்ளார்.