தல, கேப்டன் இருவரையும் மிஞ்ச ஆளில்லை: நடிகை ஜோதிகா சொன்ன காரணம்?

 

தல, கேப்டன் இருவரையும்  மிஞ்ச ஆளில்லை: நடிகை ஜோதிகா சொன்ன காரணம்?

ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் மற்றும் விஜயகாந்த் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சென்னை: ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் மற்றும் விஜயகாந்த் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஜோதிகா தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில்  பேசிய நடிகை ஜோதிகா, ‘ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். அவர்கள் செய்யும் உதவிகள் பலருக்கும் தெரியாது. இருவரும் அதை விளம்பரம் செய்யவோ குறைந்தபட்சம் அதுகுறித்து பேசுவதை கூட விரும்புவதில்லை’ என்று கூறினார்.

முன்னதாக காற்றின் மொழி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் சகஜமாக நடித்துவிட முடியாது என்றும், ஆனால் அஜித்துடன் சகஜமாக நடிக்க முடியும் என்றும் கூறியிருந்தார். நடிகர் ஜோதிகா தொடர்ந்து அஜித்தை பாராட்டி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.