‘தல’ அஜித் தான் என் முதல் காதலர்: பிரபல நடிகை ஓபன் டாக்!
பெண்கள் பலரின் கனவு நாயகனான நடிகர் அஜித் தான் எனது முதல் காதலர் என நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெண்கள் பலரின் கனவு நாயகனான நடிகர் அஜித் தான் எனது முதல் காதலர் என நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்யின் எலிசபெத்தாக அறிமுகமானவர், பார்வதி நாயர். பின்பு, `உத்தமவில்லன்’, `கோடிட்ட இடங்களை நிரப்புக’. `என்கிட்ட மோதாதே’ போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பார்வதி நாயர், ‘எனது பள்ளி பருவத்தில் நிறைய பேருடன் காதல் உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல் காதல் என்றால் அது அஜித் சாருடன் தான். தமிழ் சினிமா மட்டுமின்றி, தமிழுக்கு வரும் பெரும்பான்மையான நாயகிகளின் கனவு என்றால் அது அஜித் சாருடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். அது உண்மையாகும் விதத்தில் அவருடனே ஒரு படத்தில் நடித்துவிட்டேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மீடூ விவகாரம் பற்றி பேசியுள்ள அவர், ‘மீடூ நம்ம நாட்டுக்கு மிக முக்கியம். பெண்கள், இப்போதுதான் நிறைய விஷயங்களை வெளியில் சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. இனி ஆண்களுடைய நடவடிக்கைகளும் மாறும்; மாறணும். எல்லாத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் இருக்கு. அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறதுக்குப் பெண்களால மட்டும்தான் முடியும்’ என்று கூறியுள்ளார்.