தலைவரே காப்பாத்துங்க… மு.க.ஸ்டாலினிடம் கதறித் துடிக்கும் துரைமுருகன்..!

 

தலைவரே காப்பாத்துங்க… மு.க.ஸ்டாலினிடம் கதறித் துடிக்கும் துரைமுருகன்..!

எனக்கு இருக்குறது ஒரேயொரு புள்ள. அவனை எம்.பி.யாக்கி பார்க்க ஆசைப்படுறேன். ஆனா அவன் மேலே லாரி ஏற்றி கொள்ள நினைச்சீங்களேடா படுபாவீகளா?

வேலூரில் பிரசாரத்துக்கு போன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்கட்சியின் பகீர் பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதுதான் பெரிய ஷாக். ஆலமரம், பெட்ஷீட் இல்லாத குறையாக ஸ்டாலினை ’தீர்ப்ப சொல்லிட்டு போங்க தலைவரே!’ என்று உலுக்கி எடுத்துவிட்டனர் வி.ஐ.பி. நிர்வாகிகள்.durai murugan

அடுத்த தலைமுறைக்கு வழிவிடாமல் துரைமுருகன் பல ஆண்டுகளாக தி.மு.க.வில் கோலோச்சுவதை அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள் யாருமே விரும்பவில்லை. இந்த நிலையில் தனது மகனுக்கு எம்.பி. சீட் வாங்கிக் கொடுத்து, அவரையும் களமிறக்கினார் துரைமுருகன். இதை மிக கடுமையாக மற்ற தலைவர்கள் எதிர்த்தனர்.

உடனே ‘பொன்முடி மகன் சிகாமணி, ஆற்காட்டார் பையன் கலாநிதி, தங்கபாண்டியன் மகள் தமிழச்சி என பல வாரிசுகள் சீட் வாங்குறப்ப, நான் என் மகனுக்கு வாங்க கூடாதா?’ என்று நியாயம் கேட்டு அவர்களின் வாயை அடைத்தார் துரை  முருகன். 

இந்த நிலையில் துரைமுருகன் தரப்பு மீது எழுந்த புகாரால் வேலூரில் தேர்தலே ரத்தானது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதாவது ஸ்டாலின் வேட்பாளரை மாற்றுவார் என நினைத்தனர். அது நடக்காததால் கடும் எரிச்சலில் உள்ளவர்கள், கதிர் ஆனந்தின் வெற்றிக்கு பெரிதாய் உழைக்கவில்லையாம்.shanmugam

இதில் கடுப்பான துரைமுருகன், உட்கட்சி கூட்டத்தில் வைத்து ‘நான் என் மகனுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததை சில பேரால பொறுத்துக்க முடியலை. எனக்கு இருக்குறது ஒரேயொரு புள்ள. அவனை எம்.பி.யாக்கி பார்க்க ஆசைப்படுறேன். ஆனா அவன் மேலே லாரி ஏற்றி கொள்ள நினைச்சீங்களேடா படுபாவீகளா?’ என்று பொங்கி அழுது கொட்டிவிட்டார்.kathir

இந்த விவகாரம்தான் இப்போது வேலூர் வந்த ஸ்டாலின் முன் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. ‘துரைமுருகன் திட்டியது யாரை? கதிரை கொல்ல முயன்றது யார்? இவரது இந்தப் பேச்சை கேட்டு, மீடியாக்களும், எதிர்க்கட்சியினரும், மக்களும் எங்களை ‘உட்கட்சி வி.ஐ.பி. மகனையே கொல்லத் துணிந்த பாவிகள்’ன்னு பேசுறாங்க. அதனால யார் இந்த காரியத்தை செய்ய துணிந்ததுங்கிறதை துரைமுருகன் ஓப்பனா சொல்லணும். இல்லேன்னா தான் பொய் சொன்னேன்னு ஒத்துக்கணும். இதுக்கு நீங்கதான் தீர்ப்பு சொல்லணும்.” என்று மு.க.ஸ்டாலிண்டிடம் வெடித்துள்ளனர்.