தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தினேனா?-ஓபிஎஸ் விளக்கம்

 

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தினேனா?-ஓபிஎஸ் விளக்கம்

தலைமை செயலகத்தில் நான் யாகம் நடத்தவில்லை சாமிதான் கும்பிட்டேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

மதுரை: தலைமை செயலகத்தில் நான் யாகம் நடத்தவில்லை சாமிதான் கும்பிட்டேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண விழா ஒன்று பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கொலைக் குற்றவாளியாக சிறைக்கு செல்லவிருக்கிறார். அதனால் மீண்டும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை செயலகத்தில் இருக்கும் தனது அறையில் யாகம் வளர்த்திருக்கிறார் என குற்றம்சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே? 

யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றார்.