‘தர்பாரை’ குடும்பத்துடன் காண சென்னை வந்த ரஜினி…போட்டா போட்டி போடும் 3 தியேட்டர்கள்!
இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக நாளை தமிழகத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும், இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் ரஜினியின் தலைவர் 168 படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 168 படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். நாளை வெளியாகவுள்ள தர்பார் படத்தை குடும்பத்துடன் காண ரஜினி சென்னை வந்துள்ளார்.
‘தர்பார்’ நாளை வெளியாவதையொட்டி தலைவர் 168 படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் #Rajinikanth #Darbar #DarbarFromTomorrow #DarbarPongal #kollywoodcinima #Superstar #ttn @rajinikanth pic.twitter.com/9va1nXsjb6
— Top Tamil News (@toptamilnews) January 8, 2020
இருப்பினும் அவர் குடும்பத்துடன் படம் பார்க்க தங்கள் தியேட்டருக்கு தான் வரவேண்டும் காசி, சத்யம் மற்றும் ரோகினி ஆகிய மூன்று தியேட்டர்கள் போட்டா போட்டி போடுகிறதாம். தலைவர் எந்த தியேட்டருக்கு வருவார் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.