‘தம்பி பஜ்ஜி வேகல’… தட்டிக்கேட்ட இளைஞரை கத்தியால் வெட்டிய வடமாநில இளைஞர்; சென்னையில் பரபரப்பு!

 

‘தம்பி பஜ்ஜி வேகல’… தட்டிக்கேட்ட இளைஞரை கத்தியால் வெட்டிய வடமாநில இளைஞர்; சென்னையில் பரபரப்பு!

இவர் தனது நண்பர் ஸ்ரீனிவாசன் என்பவருடன் சவுகார் பேட்டையில் உள்ள பஜ்ஜி கடைக்கு பஜ்ஜி சாப்பிட சென்றுள்ளார்

சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமணி. எலக்ட்ரிக்கல் கடையில் வேலைபார்த்து வந்த இவர் தனது நண்பர் ஸ்ரீனிவாசன் என்பவருடன் சவுகார் பேட்டையில் உள்ள பஜ்ஜி கடைக்கு பஜ்ஜி சாப்பிட சென்றுள்ளார். அப்போது பஜ்ஜி சரியாக வேகவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கடையில் வேலைபார்த்து வந்த வடமாநில இளைஞர் அருண் ஞானமணியை திட்டவே கோபமான அவர் அருணை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார். 

murder

இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் ஆத்திரத்தில் வெங்காயம் வெட்ட பயன்படுத்தும் கத்தியை கொண்டு ஞானமணியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஞானமணியை அங்கிருந்தவர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

TTN

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.