தம்பிதுரைக்கு நெஞ்சுவலி: அப்போலோ மருத்துவமனையில் முதல்வர், துணை-முதல்வர் நலம் விசாரிப்பு

 

தம்பிதுரைக்கு நெஞ்சுவலி: அப்போலோ மருத்துவமனையில் முதல்வர், துணை-முதல்வர் நலம் விசாரிப்பு

நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சென்னை: நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதிமுக சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலியில் அஞ்சலி செலுத்துவதற்காக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தம்பிதுரை அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தம்பிதுரை சந்தித்து நலம் விசாரித்தனர்.