தமிழ்நாட்டில் ஒரு குரல், புதுடெல்லியில் ஒரு குரல் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு- தொல்.திருமா

 

தமிழ்நாட்டில் ஒரு குரல், புதுடெல்லியில் ஒரு குரல் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு- தொல்.திருமா

தமிழ்நாட்டில் ஒரு குரல், புதுடெல்லியில் ஒரு குரல் என்பது தான் அ.தி.மு.க வின் குரலாக உள்ளது என நாடாளுமன்ற எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஒரு குரல், புதுடெல்லியில் ஒரு குரல் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு- தொல்.திருமா

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “பாராளுமன்றத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாக பேசி விட்டு தமிழ்நாட்டில் அவர்களின் திட்டங்களை எதிர்ப்பது போல் அ.தி.மு.க அரசு பேசி வருகிறது.

 ஆர்.எஸ்.எஸ்ஸின் பல்வேறு திட்டங்களில் ஒன்றானது தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டும் என்பது. அதை தான் அவர்கள் செயல்படுத்துகிறார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இன்னும் தன்னிறைவு பெறாத நிலையில், காஷ்மீரை வளமிக்கதாக மாற்றுவோம் என கூறுவது வெறும் வாய் சவடாலாக தான் உள்ளது” என்று கூறினார்.