தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, “ஜெய் கர்நாடகா” என்று கோஷமிடுமாறு மிரட்டிய இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

 

தமிழக லாரியில் கர்நாடக கொடி ஏற்றி, “ஜெய் கர்நாடகா” என்று கோஷமிடுமாறு மிரட்டிய  இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நடந்து வருகிறது.

கடந்த மாதம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக வந்து கொண்டிருந்த லாரியில் கர்நாடக கொடிகள் இருந்ததாகவும் அதனைத் தமிழக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ttn

அதுமட்டுமில்லாமல், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை நடந்து வருகிறது. அதற்குப் பழி வாங்கும் நோக்கோடு நேற்று கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சென்று கொண்டிருந்த தமிழக பதிவெண் லாரியை மறித்த மூன்று பேர் அந்த லாரியில் கர்நாடகா கொடியைக் கட்டியுள்ளனர். 

ttn

அதுமட்டுமில்லாமல், லாரியை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநரையும் ‘ஜெய் கர்நாடகா’ என்று கூறும் படி வலியுறுத்தி லாரியை வழிமறித்து நின்றுள்ளனர். அதற்கு அந்த ஓட்டுநர், எனக்கு கன்னட மொழி தெரியாது என்று கூறியுள்ளார். ஆனாலும், அவரை விடாத அந்த இளைஞர்கள் ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளனர். அங்கு நடந்த சம்பவம் முழுவதுமாக அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தூண்டும் விதமாக நடந்து கொண்ட அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.