தமிழக பாஜக குரலுக்கு வேறு வழியின்றி ஒரு தொகுதி ஒதுக்கிய அதிமுக

 

தமிழக பாஜக குரலுக்கு வேறு வழியின்றி ஒரு தொகுதி ஒதுக்கிய அதிமுக

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை வழங்கியுள்ளது அதிமுக.

சென்னை: பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை வழங்கியுள்ளது அதிமுக.

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக முதற்கட்டமாக பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்தது. அதன்பிறகு தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது.

புதிய தமிழகம் கட்சியை பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. இதனால் கடுப்பான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் பாஜகவின் குரலாய் தொடர்ந்து ஒலித்து வரும் எங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை என்றால் அதிமுக அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என தெரிவித்தார். அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பொது வெளியில் பேசப்பட்டது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் பிரச்சனை வேண்டாம் என அதிமுக தரப்பு வேறு வழியின்றி புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளது.