தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசு தின வாழ்த்து !

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசு தின வாழ்த்து !

 நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.  

நம் நாட்டின் 71  ஆவது குடியரசு தினவிழா நாளை நடக்க உள்ளது.  இந்த தினத்தன்று தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி வைப்பார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அணிவகுப்பும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இங்குமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.  இதற்கான ஏற்பாடுகள் அனைத்து இடங்களிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நாடு முழுவதிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

ttn

இந்நிலையில், மக்களுக்குக் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்து ஆளுநர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘ இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு தங்களது பங்களிப்பைக் கொடுத்த போராட்ட வீரர்களுக்கும் நம் நாட்டின் சட்டத்தை இயற்றிய மேதைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளதாகவும் நாட்டின் வளர்ச்சி மற்றும் பெருமையைக் கட்டிக்காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.