தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கு தடை: நீதிமன்றம் அதிரடி

 

தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கு தடை: நீதிமன்றம் அதிரடி

அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை: அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை சமீபத்தில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்தது. மேலும், அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் வழங்கக்கூடாது எனவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை எனவும் முன்னுரிமை பெறாத (NPHH), சர்க்கரை மட்டுமே பெறும் (NPHHS) ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.