தமிழகம் வரும் மோடியை ராஜீவ் காந்தியைப் போல கொல்ல திட்டம்! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்!!

 

தமிழகம் வரும் மோடியை ராஜீவ் காந்தியைப் போல கொல்ல திட்டம்! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்!!

ராஜீவ் காந்தியைப் போல மோடியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போதையில் போன் செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

ராஜீவ் காந்தியைப் போல மோடியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போதையில் போன் செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை ஐஐடியில் நேற்று நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தமிழகம் வரும் மோடியை ராஜீவ் காந்தியை கொன்றது போல வெடிகுண்டு வைத்து கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக ஒரு கூட்டம் திருவான்மியூா் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகே ஒழிந்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

Modi

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் வதந்தி என கண்டறியப்பட்டது. மேலும் போன் செய்தது, பாஜக.வின் காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு பிரிவு செயலா் திருநாவுக்கரசு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவே போதையில் அவ்வாறு கூறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து திருநாவுக்கரசை திருவான்மியூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.