தமிழகம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை !

 

தமிழகம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் தொடர் விடுமுறை !

சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாளை முதல் தொடர் விடுமுறை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. அதனைத்  தொடர்ந்து புத்தாண்டு வரவுள்ளது. ஏற்கனவே, 24 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாளை முதல் தொடர் விடுமுறை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ttn

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், உள்ளாட்சி தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்க ஏதுவாகவும் அமையும். அதன் படி, நாளை முதல் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், டிசம்பர் 23, 24, 26, 31 ஆகிய தேதிகள் மட்டுமே கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்கள் சனிக்கிழமைகள் மற்றும் பிற விடுமுறை நாட்களில் ஈடுகட்டப்படும் என்று  உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ttn

இந்த விடுமுறையின் காரணாமாக அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.