தமிழகம் முன்னேற இருவர்தான் காரணம்: முதல்வர் பழனிசாமி

 

தமிழகம் முன்னேற இருவர்தான் காரணம்: முதல்வர் பழனிசாமி

தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான் காரணம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்: தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான் காரணம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இவ்விழாவில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

அதனையடுத்து விழாவில் பேசிய அவர், எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் துணையோடு தகர்த்தெறிந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம். தமிழகம் முன்னேற எம்.ஜி.ஆர். -ஜெயலலிதாவே காரணம் என்றார். முன்னதாக சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் பெயரை சூட்டினார்