தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 34,178 பேர் மீது வழக்குப்பதிவு

 

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 34,178 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 34,178 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிய 34,178 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் விதியை மீறி மக்கள் வெளியே வருவதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ttn

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய 34,178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களின் 28,040 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு ஊர் சுற்றியவர்களிடம் இருந்து இதுவரை 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.