தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் : அமைச்சர் வேலுமணி
Sep 16, 2019, 14:25 IST1568624147000
தமிழக தேர்தல் ஆணையம் உச்சிநீதி மன்றத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்து விட்டதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
தமிழக தேர்தல் ஆணையம் உச்சிநீதி மன்றத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை சமர்ப்பித்து விட்டதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படவில்லை.
இது குறித்து, சிவகங்கை காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரகத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும், அதனால் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.