தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

 

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது 

tt

தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்த நிலையில்  3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு மூலமாக தான் தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தத் தளர்வும் கிடையாது   என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.