தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு!

மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை : மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி  காரணமாக  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 

rain

சென்னையைப் பொறுத்தவரை   வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  அறிவுறுத்தியுள்ளது.