தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்..30 நாட்களில் 132 பேர் பாதிப்பு !

 

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்..30 நாட்களில் 132 பேர் பாதிப்பு !

10 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய பன்றிக் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய பன்றிக் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதுமட்டுமில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இந்த நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ttn

இந்நிலையில், இந்த பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஜனவரி 1 முதல் பிப்.1 ஆம் தேதி வரையிலேயே தமிழகத்தில் 132 பேருக்குக் காய்ச்சல் பரவி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் இப்போது பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கை பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

tttn

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களிடம் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளியே இருக்க வேண்டும் என்றும் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடைபெற்று வருவதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.