தமிழகத்தில் புதிதாய் பாய்ண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது காவல்துறை!

 

தமிழகத்தில் புதிதாய் பாய்ண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது காவல்துறை!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தெருவிற்கு இரண்டு டாஸ்மாக் கடைகளும், சில மாவட்டங்களில் நான்கு தெருவிற்கு ஒரு டாஸ்மாக் கடைகளும் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மதுபோதையில் வாகனங்களை இயங்கி விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள்.

tasmac

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தெருவிற்கு இரண்டு டாஸ்மாக் கடைகளும், சில மாவட்டங்களில் நான்கு தெருவிற்கு ஒரு டாஸ்மாக் கடைகளும் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மதுபோதையில் வாகனங்களை இயங்கி விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள். காவல் நிலையங்களில் காவலர்களிடம் தகராறு, வாகன சோதனைகளின் போது காவலர்களுக்கு அடிதடி, குடிபோதையில் ரகளை என்று சமீப காலங்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வாகன விதிமீறல்களும், சட்டத்தைக் கையில் பொதுமக்கள் எடுத்துக் கொள்ளும் போக்கும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. 

checking

இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துக் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழகம் முழுவதும் அமுல்படுத்தி தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வரும் தமிழக போக்குவரத்து காவல் துறை  இதையடுத்து தற்போது பாய்ண்ட் சிஸ்டத்தைக் கொண்டுவர உள்ளது. இதன் படி ஒவ்வொரு முறை விதிமீறலில் ஈடுபடும்போதும் 2 புள்ளிகள் கொடுக்கப்படும். 5 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபடும் நபரின் வாகன உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த பாய்ண்ட் சிஸ்டம் விரைவில் சென்னைக்கு அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.