தமிழகத்தில் பாஜக நுழைய முடியாததற்கு ஒரே காரணம் பெரியார்தான் – கே.எஸ். அழகிரி

 

தமிழகத்தில் பாஜக நுழைய முடியாததற்கு ஒரே காரணம் பெரியார்தான் – கே.எஸ். அழகிரி

பாஜக தமிழகத்தில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கு ஒரே காரணம் தந்தை பெரியார் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி , “கருணாநிதி தற்போது இருந்து இருந்தால் காஷ்மீர் விவாகரத்தை நடக்கவிட்டு இருக்க மாட்டார். நேரு காஷ்மீரை இந்தியாவோடு சேர்த்தார். ஆனால் மோடி இருந்து இருந்தால் காஷ்மீரை பாகிஸ்தானோடு சேர்த்து இருப்பார்.

Alagiri

நேருவை நம்பி அப்போது இந்தியாவோடு இஸ்லாமியர்கள் சேர்ந்தார்கள். ஆனால் மோடியின் காஷ்மீர் பிரிப்பால் அங்கு உள்ள மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளார்கள். பாஜக தமிழகத்தில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கு ஒரே காரணம் தந்தை பெரியார் தான். கடவுள் நம்பிக்கை , மத நம்பிக்கை இருக்கலாம் ஆனால் அது மதவெறியாக தான் மாறக்கூடாது.