தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு!

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 48 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 48 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 70 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

coronavirus

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “இன்று மேலும் 75 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை அறிவிக்கப்பட்டவர்களில் 264 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். கொரோனா பதிப்பில் தற்போதைய நிலையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது” என தெரிவித்தார்.