தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக 700-க்கும் அதிகமானோரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக 700-க்கும் அதிகமானோரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். மேலும் தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 211 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பாதிப்பு குறித்து சோதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாவதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார்.