தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது: குஷியில் குதித்த தமிழிசை

 

தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது: குஷியில் குதித்த தமிழிசை

பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை, தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை, தமிழகத்தில் காவி ரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட மோடி, அதன்பிறகு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் மோடியை புகழ்ந்து பேசிய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், காவி தொப்பி, காவி துண்டு, காவி ரத்தம் இங்கே பாய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலரும் என குஷியில் குதித்து பேசினார். இதனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.