தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் : வாகனங்களின் எண்கள் வெளியீடு!

 

தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் : வாகனங்களின் எண்கள் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கூறப்படும் நிலையில் சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பதிவெண்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள்  இலங்கை வழியாகத் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகத் தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில்  ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் பதிவெண்ணை வைத்து வாகனங்களைக் கண்டறியும் சோதனையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். TN 70 A 7779 INNOVA, TN 02 Q 7756 SWIFT,TN 99 Q 5260 XYLO ஆகிய கார்களை அடையாளமாகக் கொண்டு காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.