தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும். உள் தமிழக மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று  முதல் வெப்பநிலை அதிகரிக்கும்.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.