தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் சினிமா…

 

தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் சினிமா…

தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 24 மணி நேரமும் தியேட்டர்களில் சினிமா படங்களை திரையிட்டுகொள்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கடை திறக்க தமிழகத்தில் கொடுத்த அனுமதி இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் தியேட்டர்களும் 24 மணி நேரம் இயங்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். புதிய அரசாணையின்படி மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கூறுகையில், ‘ இந்த அறிவிப்பு வரவேற்கதக்கது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வசூல் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே திரையிடும், நேரத்தை அதிகரித்துள்ளதன் காரணமாக, டிக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவது குறையும்’ என கூறினார்.