‘தமிழகத்தில் இனி தான் விஸ்வரூபம் எடுப்போம்’ – மிரட்டும் தமிழிசை

 

‘தமிழகத்தில் இனி தான் விஸ்வரூபம் எடுப்போம்’ – மிரட்டும் தமிழிசை

தமிழகத்தில் இனி பாஜக விஸ்வரூபம் எடுக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் இனி பாஜக விஸ்வரூபம் எடுக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை சமுதாய மக்களை மத்திய பாஜக அரசு மதிப்பதில்லை என்றும், அவர்களை நசுக்கும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது என்றும் மிக காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சிறுபான்மை மக்களை மதிக்கவில்லை என்று கூறி வருகிறார். சிறுபான்மை இன மக்களை பாஜக மதிக்கிறது.

tamilisai

இனிமேல்தான் பாஜக தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்க உள்ளது. நீங்களா? நாங்களா? என்று பார்ப்போம். புயல் பாதிப்பு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என ஸ்டாலின் தொடர்ந்து பொய்யை கூறி வருகிறார். மத்திய அரசு, தமிழக அரசுடன் இணக்கமாக தான் உள்ளது. கஜாபுயல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.