தமிழகத்தில் இதுவரை காவல்துறையினர் 107 பேருக்கு கொரோனா 

 

தமிழகத்தில் இதுவரை காவல்துறையினர் 107 பேருக்கு கொரோனா 

தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டைச் சேர்ந்த 4 காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் காவல்துறை, தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 5 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் கோவையில் காவல்துறையைச் சேர்ந்த 7 பேருக்கும்,  ராமநாதபுரத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 4 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

police

இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு காவல் பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களில் காவல்துறையினர் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளனனர்.