தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

 

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 8செ.மீட்டர் மழையும் மதுரை மேட்டுப்பட்டியில் தலா 7செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் புதுவையிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.