தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா!

 

தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களான திருச்செந்தூர், பழனி,திருத்தனி,சுவாமி மலை,திருப்பரங்குன்றம்,திருப்போரூர், சிறுவாபுரி,வல்லக்கோட்டை முருகன் கோயில்,மயிலம் முருகன் கோயில் ,மருதமலை முருகன் கோயில், ரத்தினகிரி முருகன் கோயில்,குன்றத்தூர் முருகன் கோயில் ,வடபழனி முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

murugan

இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும் எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

murugata

கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு பாலும் பழமும் கடைசி நாளான ஆறாம் நாளான இன்று முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கடந்த ஐந்து நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான இன்று மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
இன்று காலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானுக்கு பூ போட்டு சஷ்டி கவசம் பாடி விரதத்தை தொடங்க  வேண்டும்.

murugan

இன்று முழுவதும் மௌன விரதம் இருந்து உணவு அருந்தாமல் மாலையில்அருகில் உள்ள  முருகன் கோயிலில் நடக்கும் சூரசம்ஹாரத்தை கண்டு வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை கடைபிடிப்பதால் வேண்டுதல்களை முருகப்பெருமான் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் அசைக்க கூடியாத நம்பிக்கையாகும்.