தன் பயிற்சியாளரின் உடலை ஏந்திச் சென்ற சச்சின்: வைரலாகும் புகைப்படம்

 

தன் பயிற்சியாளரின் உடலை ஏந்திச் சென்ற சச்சின்: வைரலாகும் புகைப்படம்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின், தன் பயிற்சியாளரின் உடலை ஏந்திச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின், தன் பயிற்சியாளரின் உடலை ஏந்திச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என புகழப்படும் சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 

சச்சின் இந்த அளவு கிரிக்கெட்டில் தேர்ச்சி பெற, அவர் சிறுவனாக இருந்த போது அவருக்கு பயிற்சி அளித்த ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளர் தான் முக்கிய காரணம் என பல தருணங்களில் சச்சினே தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ராமாகாந்த அச்ரேக்கர், நேற்று மாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், அவரின் இறுதி ஊர்வலம் மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது, அச்ரேக்கரின் உடலை சச்சின் டெண்டுல்கர் தன் கையில் ஏந்திச் சென்றார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.