தனுஷின் கர்ணன் படத்தில் ‘தளபதி’ ; ஷூட்டிங் குறித்து தனுஷின் அப்டேட்!
கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் லால், கௌரி கிஷன் உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது.
That’s a wrap for karnan second schedule. 90 percent of the shoot completed. pic.twitter.com/BDIXQVgq8e
— Dhanush (@dhanushkraja) February 24, 2020
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்ணன் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நிறைவடைந்துவிட்டது. படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார். அத்துடன் குதிரையுடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அணிந்துள்ள டீ ஷர்ட்டில் ரஜினியின் தளபதி படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.