தனது மூன்றாவது பாலிவுட் படத்தின் சீக்ரெட்டை உடைத்த தனுஷ்!

 

தனது மூன்றாவது பாலிவுட் படத்தின் சீக்ரெட்டை உடைத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது மூன்றாவது பாலிவுட் படத்தை பற்றி அறிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் தனுஷ் தனது மூன்றாவது பாலிவுட் படத்தை பற்றி அறிவித்துள்ளார். 

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான the extraordinary journey of the fakir பாலிவுட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கென் ஸ்காட் இயக்கத்தில் உருவான இப்படம் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத்தொடர்ந்து அப்படத்தைத் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ், சர்வதேச படத்தில் பணியாற்றிய தனது அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் உரையாடிய தனுஷ், தனது அடுத்த பாலிவுட் படம் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டார். 

dhanush

ஏற்கனவே ‘ஷமிதாப்’, ‘ராஞ்சனா’ உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்த தனுஷிற்கு பாலிவுட்டிலும் ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில் இவர் தற்போது இயக்குநர் ஆனந்த் எல்.ராய்-ஐ சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் படத்தை பற்றி பேசி முக்கிய  முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.