தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மகளை பலாத்காரம் செய்து பழிதீர்த்தேன்: 63 வயது ஆசிரியரின் பகீர் வாக்குமூலம்!?

 

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மகளை பலாத்காரம் செய்து பழிதீர்த்தேன்:  63 வயது ஆசிரியரின் பகீர் வாக்குமூலம்!?

மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 63 வயதான ஆசிரியர் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோட்டயம்:  மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 63 வயதான ஆசிரியர் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

abuse

கேரள மாநிலம்  கோட்டயத்தில் உள்ள  ஒரு மசூதியின் வளாகத்துக்குள் அமைந்துள்ள பள்ளியில் (மதாரஸா) ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யூசப். 63 வயதான இவர், அங்குக் கல்வி கற்க வந்த சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

abuse

புகாரின் அடிப்படையில் ஆசிரியர் யூசுப்பை கைது செய்த   போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில், இதுவரை தான் 12 சிறுவர்களுக்கும் மேலாகப் பலாத்காரம் செய்ததாகவும், தன்னுடைய  25 வயதிலிருந்தே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை  அளித்து வந்ததாகவும் யூசுப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரைப் பழிவாங்க எண்ணி அவரது  மகளைத் தாம் பலாத்காரம் செய்ததாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

crime

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது போன்ற குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து  கூறி வருகின்றனர்.