தனக்குத் தானே கருக்கலைப்பு செய்து இறந்த குழந்தையை குப்பையில் வீசிய இளம்பெண்!

 

தனக்குத் தானே கருக்கலைப்பு செய்து இறந்த குழந்தையை குப்பையில் வீசிய இளம்பெண்!

அமெரிக்காவில் தனக்குத்தானே கருக்கலைப்பு செய்து கொண்ட இளம்பெண், இறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் தனக்குத்தானே கருக்கலைப்பு செய்து கொண்ட இளம்பெண், இறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ட்ரம்புல் மாகாணத்தைச் சேர்ந்தவர் லிசா மேரி ஜோர்டன். 30 வயதான இவர், கர்ப்பமாக இருப்பதை அறிந்த சில மாதங்களிலேயே கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால் அந்த கரு கலையவில்லை. 9 மாதங்கள் முடிவில் அவருக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

baby

முதலில் தனக்கு கரு சிதைவு ஏற்பட்டது எனக்கூறிய லிசா, அதன்பின் கருக்கலைப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். உயிரிழந்த குழந்தையை லிசா குப்பையில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லிசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், இறந்த குழந்தையை குப்பைக்கிடங்கில் வீசிய குற்றத்திற்காக 30 நாட்கள் சிறை தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு அவர் நன்னடத்தை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.