தந்தை தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்: காதலை தட்டிக்கேட்டதால் விபரீதம்!

 

தந்தை தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்: காதலை தட்டிக்கேட்டதால் விபரீதம்!

படித்துவிட்டு வேலைக்குப் போகாமல் காதலித்து வந்ததைத் தட்டிக்கேட்ட தந்தையின் தலையில் மகனே கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: படித்துவிட்டு வேலைக்குப் போகாமல் காதலித்து வந்ததைத் தட்டிக்கேட்ட தந்தையின் தலையில் மகனே கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்துள்ளார். அதோடு இல்லாமல், இவர் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் காதலித்து வந்துள்ளார். 

ஏற்கனவே மகன் வேலைக்கு செல்லாமல் இப்படி சுற்றி வருவதைக் கண்டு, எரிச்சலில் இருந்த விக்னேஷின் தந்தை சுந்தரராமனுக்கு, இவரின் காதல் குறித்து தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, முதலில் வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் காதலிக்குமாறு தன் மகனுக்கு சுந்தரராமன் அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லைப் போட்டு விக்னேஷ் கொலை செய்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து உடனடியாக, தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சுந்தரராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விக்னேஷையும் கைது செய்துள்ளனர்.