தந்தைக்கு மதுவாங்கிக்கொடுத்து மகளை சீரழித்த இளைஞர்!

 

தந்தைக்கு மதுவாங்கிக்கொடுத்து மகளை சீரழித்த இளைஞர்!

கன்னியாகுமரியில் தந்தைக்கு மதுவாங்கிக்கொடுத்து அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரியில் தந்தைக்கு மதுவாங்கிக்கொடுத்து அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி. அவருடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆரோக்கிய ஜீன். இருவரும் வேலை முடிந்தவுடன் மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த 31ஆம் தேதி ஆரோக்கிய ஜீன், மது வாங்கிக்கொண்டு, தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, வீட்டிற்குள் நண்பரின் வாய் பேச முடியாத, காது கேட்காத மனைவியும், அவரது 11ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளனர். அப்போது நண்பருக்கு ஆரோக்கிய ஜீன் மதுவை ஊற்றிக்கொடுத்து அவரை நிலைகுலைய செய்துள்ளார். அதன்பின் அவரது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நண்பரின் மனைவி வாய்பேச முடியாததால் யாரையும் கூப்பிட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தன் மகள் தன் கண் முன்னே சீரழிவதை பார்த்து வேதனையின் உச்சத்துக்கு தள்ளப்பட்டார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய். காலை போதை தெளிந்தவுடன் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கேள்விப்பட்டு அதிர்ந்து போனார் மீன்பிடி தொழிலாளி.

rape

போலீசாரிடம் அளிட்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.