தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது- கனிமொழி!

 

தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது- கனிமொழி!

அரசு தண்ணீர் பிரச்சினையை மறைக்க நினைக்கிறது என நாடாளுமன்ற எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

அரசு தண்ணீர் பிரச்சினையை மறைக்க நினைக்கிறது என நாடாளுமன்ற எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “தண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்துவதால் தண்ணீர் பிரச்னையை அரசியல் ஆக்குகிறோம் என்று அதிமுக சொல்கிறது. இது தேர்தலுக்கான அரசியல் இல்லை. பிளாஸ்டிக் குடங்களை வைத்துக்கொண்டு மக்கள் தண்ணீருக்கு அலையும் நிலை தான் தமிழகத்தின் அடையாளமாக இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு தண்ணீர் பிரச்சினையை மறைக்க நினைக்கிறது. 

மத்திய அரசுக்கு பயந்து கேரளாவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு மறுத்து விட்டது. இதே மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் இந்த அரசை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் முன் எடுக்கும். மக்களின் உணர்வுகளை இந்த அரசுக்கு எடுத்துரைப்போம். ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும். மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்” என்று கூறினார்.